Subscribe:

Pages

Tuesday, September 1, 2009

கனவுகளே இன்று கவிதையாய்.........

னவு என்பது ஒரு சிறிய வாழ்க்கை!
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட கனவு!

இவற்றிலிருந்தே ஆரம்பம்... என் முதல் பயணம்......




ர் நாள்
எங்கேயோ அழைத்து செல்கிறாய்
நீண்ட தூரம்
நடக்கமுடியவில்லை என்றேன்
என் கைப்பிடித்துக்கொள் என்றாய்
பிடித்து நடந்தேன்
உற்சாகத்தோடு……
அழகான கவிதையாய் !

ற்றொரு நாள்
ரம்யமான மாலை வேளை
மொட்டை மாடியில்
நீயும் நானும்.
வருடிச்செல்லும் தென்றல்
என் கூந்தலினை கலைக்க….
முகத்தில் விழுந்த முடியை
அழகாக விலக்கினாய்
உன் விரல்களால்……
ரசனையான கவிதையாய் !

ன்றொரு நாள்
எதையோ எதிர்பார்த்து
என் விரல்கள்
உனது விரல்களை
பிடித்தது மிக அழுத்தமாக
உடனே என்னை வசீகரிக்கும்
சிறிய புன்னகையுடன்
ஆழமான ஒர் பார்வை
பார்த்தாய் - அழகான
அந்த இரவு வெளிச்சத்தில்…..
அர்த்தமுள்ள கவிதையாய் !

ன்னொரு நாள்
இப்படி ஒன்று
கிடைக்காதா என்று
ஏங்கவைக்கும்
இதில்
யார் கொடுப்பது
யார் பெற்றுக்கொள்வது
தெரியவில்லை
இருந்தாலும் தொடர்கிறது
நீண்ட நேரம்
இதழ்களின் வழியே
உள்ளே நுழைந்து
உயிர் எங்கே என்று
தேடி செல்லும்
உ(எ)ன் முத்தம்……..
உயிருள்ள கவிதையாய் !

விதைக்கு
பொய் அழகாம்
என் கவிதையும் கூட – ஆனால்
பொய்யான நிஜம்
என் கனவுகளே
இன்று கவிதையாய் !

3 comments:

பால்ராஜ் said...

அழகான உணர்வுகளைப் பாராட்டிட வார்த்தைகள் என் வசம் இல்லை!

Priya said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பால்ராஜ்!

அ.முத்து பிரகாஷ் said...

முதற் பகிர்வு ஓவியமாகத் தானிருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன்..

கவியோவியம் :))

Post a Comment