Subscribe:

Pages

Thursday, July 28, 2011

காதல் மொழி பேசும்.... கற்கள்!

                வரைவதில் குறையாத ஆர்வம்... தொடர்கையில் புது புது முயற்சிகளில் ஈடுபட மனம் முயல்கிறது. கொஞ்ச நாட்களாகவே கல்லில் வரைவது பிடித்திருக்கிற‌து. மிக குறைந்த நேரத்தில் வரைய முடிகிறது. இதற்காக கடற்கரை செல்லும் பொழுதுகளில் கல்லை தேடி தேடி எடுக்கிறேன். நான் மட்டுமல்ல எனக்காக என்னவரும் கண்களை நிலத்தில் தவழ விட்டபடி கற்களை தேடி அலைந்ததை பார்க்கும்போது கொஞ்ச‌ம் சிரிப்பு வந்தாலும் நெஞ்சம் மகிழத்தான் செய்கிறது. அவரின் ஊக்கம் மிக பெரிய பலம் எனக்கு!

வரைய நினைக்கும் காட்சிகளை கண்முன் நிறுத்தி கற்பனை கொண்டு வண்ணம் தீட்ட, குவிந்திருக்கும் கற்களில் எதை எடுத்தாலும் அழகாகவே தெரிந்தது.


அழகாய் தெரிந்த கற்களை இன்னும் அழகாக்க ஏதோ சிறு முயற்சி செய்ததுதான் கீழ்காணும் படங்களில் உள்ளவை. இதற்கான பெயிண்ட் இல்லாத நிலையில் என்னிடம் இருக்கும் ஆயில் பெயிண்டையே உபயோகித்து சென்ற‌ வாரம் வரைந்தேன். நன்றாக காய்ந்தபின் கொஞ்சம் வார்னிஷ் அடித்துவிட... கல் கண்ணாடி போல் ஆனது!


முதலில் ஒரு ஜோடியை நீல நிறத்தின் பின்னனியில் வரைய ஆரம்பித்தேன். பின் அதுவே சுவாரஸியமாக தெரிய அப்படியே தொடர்ந்தேன்... வெவ்வேறு வண்ணங்களில். இதோ.... காதல்  மொழி பேச தனித்திருக்கும் இரு உள்ளங்கள்!






Sunday, July 10, 2011

தீராத பார்வைகள்...!


சங்காத பார்வை
என் உரிமை நீ
என சொல்லாமல்
சொல்லும் பார்வை!

இந்த பெண்ணிற்கென்ற
கனவு உலகில் நுழையும்
அதிகாரம் பெற்று
என் கனவுகளையும்
காட்சிகளாக்கும்!

ஒரு நிமிடப்பார்வை
 உயிர்வரை இனிக்கும்
மறு நிமிடப் பார்வையோ
யுக யுகமாய் நீடிக்கும்!

வார்த்தைகளற்ற பொழுதுகளில்
மனதில் வழியும் நேசம்
க‌ண்க‌ளில் மின்ன
புன்னகைத்து பேசிச் செல்லும்!

உன் விழி தீண்ட‌லில்
என் பெண்மை விழித்துக்கொள்ள‌
வெட்கை போர்வைகொண்டு
உன் முகம் பார்க்க
முடியாமல் தவிக்க வைக்கும்!

அணைக்க மறந்து
விரல் கூட தீண்டிடாமலே
பார்வை ஸ்ப‌ரிச‌ங்க‌ளாகி
உள்ளம் தொட்டு
உயிரில் தங்கும்!

தீராத உன் பார்வைகள்
தித்திக்கும்
நித்தம் என்னை அழகாக்கும்!

காணும் நொடிகளில்
எனக்குள் உன்னை தேடி
கண்டெடுக்க முடியாமல்
என்னுயுரிலே கலந்து
உணர்வுகளின் உச்சத்தை
தாங்கி நிற்கும்!

பார்வையின் வேகம்
வ‌தைத்தாலும்
செதுக்குகிறது என்னை!

உன் விழித்தீண்ட‌
யாசிக்கும்
என் கவிதைகளானாலும்
கவிதையான
உன் பார்வைகளே
நான் பெற்ற பாக்கியமடா...!

காதல் பூத்திருக்கும்
உன் பார்வையால்
கவிதை எழுதுகிறது
என் கண்கள்!

Friday, July 1, 2011

அதிசயத்துடன் கூடிய சித்திரமவள்... பெண்!

ழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்...என்ற தலைப்பில் நான் வரைந்த ஒரு சில பெண் ஓவியங்களை பகிர்ந்துக்கொண்டதின் தொடர்ச்சியாக இங்கே இன்னும் மூன்று ஓவியங்களை தந்திருக்கிறேன். கருப்பு வெள்ளை படங்களில் எனக்கு எப்பொழுதும் ஆர்வம் அதிகம் எனபதால் வாரப்பத்திரிக்கைகளில் வண்ண ஓவியங்களாக இருந்ததை வெறும் பென்சில் மட்டுமே உபயோகித்து சிறு சிறு மாற்றங்களுடன் எனக்கு பிடித்தமாதிரி வரைந்துக்கொண்டேன்.

நகரத்து நவநாகரிக நங்கையாக......



ஆச்சாரம் சிதறாத பதுமையாக‌.....



அம்சமான செல்வ சீமாட்டியாக......