Subscribe:

Pages

Wednesday, September 9, 2009

புதிராக ஒரு கனவு......

புரியாத புதிராக வருகிறது
உன்னைப் பற்றிய கனவு
ஒவ்வொன்றும்
ஒரு அழகான கவிதையாக !

கனவினாலே
நினைவுகளில் நிறைந்து
முத்தங்களால் ஆன கனவிது !

விலகி நிற்கும் உன்னை
நெருங்க வைக்கிறேன்
என் விழி பார்வையால்
இருந்தும் ஏதோ
தயக்கம் உனக்கு.

இம்முறை என்னுடையது போல்……
உனது சட்டையைப் பற்றி
இழுத்து அனைத்துக்கொள்கிறேன்
என் இதழ் ஸ்பரிசத்திற்காக
காத்திருந்த உனது ஏக்கத்தை
வெளியேற்றுகிறேன்
அழுத்தமான ஒரு முத்தம்
நீண்டு........ நீண்டுக் கொண்டே போகிறது……….
ஆழமான பார்வையுடன் !

காத்திருந்து கிடைத்ததில்
சந்தோஷம் உனக்கு !
பரிசாக நீயும் தந்தாய்
என் கண்களின்மேல்
கவிதையாய் ஒரு முத்தம் !

2 comments:

ஜெனோவா said...

//காத்திருந்து கிடைத்ததில்

சந்தோஷம் உனக்கு !

பரிசாக நீயும் தந்தாய்

என் கண்களின்மேல்

கவிதையாய் ஒரு முத்தம் //

Rasittha varikal... thodarnthu eluthunkal..

btw //அனைத்துக்கொள்கிறேன் // pilayai thiritthividunkal

Vaalthukkalum Nanriyum

Priya said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !!!

Post a Comment