Subscribe:

Pages

Monday, August 5, 2013

முதல் ஸ்பரிசம்...!


              புகைப்படங்களை பார்த்து வரைவது என்பது எப்போதுமே சுவாரஸியமாகத்தான் இருக்கிறது. அதிலும் நம்மோட படத்தை பார்த்து நாமே வரையும் போது இன்னும் சுவாரஸியம் கூடுகிறது. என் நிச்சயத்தார்த்தத்தின் போது என்னவர் என் கைபிடித்து மோதிரம் போடும் புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.., அதுவே இம்முறை என்னை வரையத்தூண்டியது. பொதுவாக என்னை கவரும் எதையும் நான் நேசித்தே வரைகிறேன்.... அதேப்போல் இதையும் நான் மிகவும் ரசித்து நேசித்தே வரைந்திருக்கிறேன்.


வழக்கம் போல் A4 தாளில்....  HB - 6B பென்சிலால் வரைந்திருக்கிறேன். மொத்தமாக வரைந்து முடிக்க 5 மணி நேரம் ஆனது. முன்பே பதிவுகளில் சொல்லி இருப்பதை போல பெயிண்டிங்ஸை போல் அல்ல பென்சில் ஸ்கெட்ச், வரைவது மிக சுலபமாகவே இருக்கிறது. அதிக நேரம் கூட‌ தேவைப்படுவதில்லை.
 
தேவைப்படுவது எல்லாம் ஒரு Paper, Pencil, Eraser ...  கொஞ்சம் பொறுமை மட்டுமே.




Sunday, July 7, 2013

கரையாத நினைவுகளோடு... !




சேமித்து வைக்கிறேன்...
காலங்கள் உருண்டோடியும்
கரையாத நினைவுகளோடு
உணர்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள‌
உன் பார்வை ஒவ்வொன்றையும்!

கடந்து சென்ற காலங்களில்
கண்களினால் கவிதை
எழுதியவன் நீ!

உன் முதல் பார்வையிலே
முழுவதுமாக என்னை சரித்தாய்....
ஆழமான பார்வையில்
அன்பாய் பேசுவாய்
ஆசையோடு பார்த்து
என் வெட்கத்தை சுவைப்பாய்.

நிஜமான உன் நேசத்தால்
நித்திரை பறித்து
பார்வையாலே பாவை இவளிடம்
காதல் புரிவாய்!

நீ கண் அசைத்தால்
நான் மனம் சாய்கிறேன்
உன் பார்வை பட்டதும்
என் சுயம் மறக்கிறேன்.

கண்ணியமான உன் பார்வையால்
இவளில் காதல் பிறக்கும்
காதலான உன் பார்வையால்
என்னில் ஆசைகள் சுரக்கும்

அழுத்தமான பார்வை ஸ்பரிசத்தால்
என் பெண்மை தவிக்கும்...
உன் உயிரில் இணைந்திட துடிக்கும்!

உன் பார்வையின் இன்னும் பல‌
உண்மைகளை அறிய ... தொடர்ந்து
சேமித்து வைக்கிறேன்
 ....... உன் பார்வை ஒவ்வொன்றையும்!