Subscribe:

Pages

Tuesday, January 28, 2014

உயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..!!!

 
"முத்தம்
சத்தமில்லாத இசை  
சந்தம் தழுவிய கவிதை"
                                       .......இப்படி முத்தத்தை பற்றிதான் எத்தனை எத்தனை கவிதைகள்..... உணர்ச்சிகளின் வெளிபாடாக ஒவ்வொரு உறவு நிலைக்கு தகுந்து முத்தம் மாறுபட்டாலும், காதலோடு கொடுக்கும் / பெறும் முத்தம் ...மட்டும் இரண்டு ஆன்மாக்கள் இணையும் தருணமாகிறது. இதை பற்றி ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதப்பட்டாலும், கவிதையாய் ஒரு ஓவியம் வரைந்திட நீண்ட நாள் ஆசைக்கொண்டிருந்தேன். அதற்கான ஒரு தருணம் வாய்திட, இதோ....முழுவதுமாக ஒன்பது மணி நேரத்தில் ஒரு முத்தச்சித்திரம் உருவானது. உண்மையிலே உயிர் திறக்கும் முத்தம்... ஒரு வித்தைதான், இல்லையா நண்பர்களே..!




Wednesday, January 15, 2014

நானே நல்ல மேய்ப்பன்...!

         
         ப்ரியமான பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவுகளிட்டு எனது வலைதளத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்கவே விரும்புகிறேன். ஆனால் பல சமயங்களில் அது முடியாமலே போகிறது. எழுதுவது குறைந்து போனாலும் வரைவது மட்டும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் பென்சிலால் வரைவதில் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதற்காக நிறைய நுணுக்கங்களை கற்றுகொள்வதில் ஆரம்பித்து சிறந்த ஆர்ட் மெட்டிரியல்களை தேடி தேடி பார்த்து வாங்கி கொண்டிருக்கிறேன். கடந்த வருடத்தில் வரைந்த சில‌ சித்திரங்களை இனி வரும் பதிவுகளில் உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். அதில், நான் மிகவும் விரும்பி....பல காலமாக வரைய நினைத்ததுதான் இங்கு நீங்கள் காண்பது


பைபிள் கூறும் வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் இது
'நானே நல்ல மேய்ப்பன்'..... நீண்ட நாட்களாக இதற்கு ஏற்றபடி ஒரு படம் வரைய வேண்டும் என நினைத்திருந்தேன். விரும்பியபடியே ஒரு வாழ்த்து அட்டையில் இருந்த படம் என்னை கவர, அதை பார்த்து வரைந்திருக்கிறேன். இம்முறை A5 தாளில், HB, 2B-6B பென்சில்களை உபயோகித்து வரைந்தேன், வரைந்து முடித்தபோது மனது முழுவதும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.