Subscribe:

Pages

Wednesday, September 2, 2009

மவுனமே ரசனையாய்......

சிக்கின்றேன் !
உன் கண்களை
உன் சிரிப்பினை
நீ பேசுவதை
இன்னும் நிறையவே…………

இதையெல்லாம் விட
இன்னும் அதிகமாக
ரசிக்கின்றேன்
நாம் பேசுகின்றபோது
நிலவும் சில நொடி
மவுனங்களை.

பல கோடி வார்த்தைகளில்
காணமுடியாத
அர்த்தத்தினை…
அழகினை……….
ஆழத்தை……….
ஒரு நொடி மவுனம்
உணரச்செய்கிறது.

எதிர்ப்பார்த்து
நிகழ்வதில்லை இம்மவுனம்.
பேச்சு தெளிவாகவே
இருந்தாலும்…
ஏதோ ஒன்று
தடுமாற செய்கிறது
நம்மிருவரையும்
ஒரே நேரத்தில் !

மவுனம் நிலவும்
அந்த ஒரு நொடி
எவ்வளவு
வார்த்தைகள் பேசும்…
எத்தனை
கவிதைகள் படைத்திடும்….
இன்னும்
என்னவெல்லாம் செய்யும்……..

உணர்வுகளே ரசனையாய்
பேசும் பொழுது
நமக்குள்ளே நிகழும் மவுனம்
ரசனையானதுதானே……….
ரசிக்கின்றேன்
இன்னும் அதிகமாக !

0 comments:

Post a Comment