ஒரே ரசனை உள்ளவர்கள் வாழ்க்கையில் இணையும் போது வாழ்க்கையே ரம்மியமானதாகி விடுகிறது. எனது ரசனைகளேற்ற வாழ்க்கை துணை எனக்கு கிடைத்திருப்பதால் காணும் ஒவ்வொன்றிலும் இன்பம் அடைகிறேன். இயற்கையை ரசித்து வாழத்தெரிந்தாலே எப்போழுதும் மனதில் உற்சாகம்தான்... அதிலும் பிடித்தவருடன் எனும்போது காணும் அனைத்தும் சொர்க்கம்தான். இந்த நாட்டிற்கு வந்ததில் இருந்து எத்தனையோ அழகழகான இடங்களை எல்லாம் என்னை அழைத்துசென்று காண்பித்த என்னவர், இம்முறை சென்ற வாரக்கடைசியில் அழைத்துச்சென்றது கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடக்கும் ஊரில் இருந்து பத்து கிமீ தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியை போல இருந்த ஒர் இடத்திற்கு!
நகரத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட அப்பகுதியில் சுற்றிலும் அடர்ந்திருந்த மரங்களின் நடுவில் ஒரே ஒரு கட்டிடம், பார்ப்பதற்கு வீடு போல் தோற்றமளித்தது. ஆனால் அதற்குள் இத்தனை அதிசயங்கள் நிறைந்திருக்குமா என எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. ஒருசில கார்கள் மட்டும் அங்கே நிறுத்தப்பட்டு இருந்தது. அதேப்போல சில குடும்பங்களும் காத்திருந்தனர். சரியாக மதியும் இரண்டு மணிக்கு பூட்டி இருந்த அந்த கட்டிடத்தின் கதவு திறக்கப்பட, எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள்... நாங்களும் பின் தொடர்ந்தோம்.
உள்ளே நுழைந்தவுடன் எதிரில் ரிசப்ஷன், வலதுபுறத்தில் சிறிய கடை இடதுபுறத்தில் சின்ன ரெஸ்டாரண்ட் என மிக எளிமையாக இருந்தது. ரிசப்ஷனிஸ்ட் வர, அனைவரும் டிக்கெட் வாங்கிக்கொண்டு காத்திருந்தோம். சிறிது நேரத்திற்குபின் அங்கு வந்து சேர்ந்தார் ஒரு கைட். காத்திருந்த 25 பேர்க்கொண்ட குழுவினை தன்னை பின் தொடருமாறு சொல்லி ரிசப்ஷன் பக்கம் இருந்த கதவினை திறந்தார். வியக்க வைக்கும் அதிசயங்கள் உள்ளே காத்திருந்தது தெரியாமல் அவரை தொடர்ந்துபடி படிக்கட்டுகளில் இறக்கிச்சென்றேன். ஆஹா, அதற்குள் ஒரு உலகம்.... கீழ் நோக்கியபடி 11 அடுக்குகளை கொண்டிருந்த Cavernனுடைய பெயர் Grottes de Saint Cézaire.
1925ல் அதன் மேல் ஒரு கட்டிடம் எழுப்பி மின்சார வசதியும் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு 1926ல் Cavernனுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு பிரெஞ்சு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா இடமாகி இன்று நூற்றுக்கணக்கான மக்களின் கண்களுக்கு விருந்தாக காட்சியளித்து கொண்டிருக்கிறது.
(மின்சார இணைப்பற்ற நிலையில் கையில் விளக்குடன் சுற்றி பார்த்தவர்கள்... 1926ல்!)
இந்த cavern பிறந்த கதை இதுதான் என்றாலும் அப்படி என்ன அதிசயங்கள் அதன் உள்ளே நிறைந்திருக்கும் என்பவர்களுக்காக இதோ நான் ரசித்து எடுத்து புகைப்படங்கள்!
உள்ளே இறங்க ஏற்படுத்தப்பட்ட வழி இதுதான்...
ஆனால் Mr. Leon Dozol கண்டுப்பிடித்த வழி.... இது!
இயற்கையில் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றெண்ணியவாறு படம்பிடித்துக்கொண்டிருக்க, அந்த கைட் சொன்ன விளக்கங்கள் மேலும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. Combination of chemical processes, erosion from water, tectonic forces, micro organisms, pressure, atmospheric influences, digging.etc எனபலத்தரப்பட்ட geological processes மூலமே இப்படி உருவாகிறதாம். ஏதோ ஒன்றிரன்டு வருடங்கள் அல்ல பல நூற்றாண்டுக்களாக வளர்ந்து வருகிறதாம். ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் பலவிதங்களில் வடிவம் பெறுவதை என்னவென்று சொல்வது! பூக்களைப் போலவும், பழவகைகளைப்போலவும், விலங்குகளைப்போலவும் தோற்றமளிக்கிறது.
கீழே காணும் படத்தில் இருக்கும் இடத்திற்கு திராட்சை குவியல் என்று பெயர்... மேலிருந்து சொட்டும் ஒவ்வொரு துளி நீரும் கல்லில் பட்டு சிதறும் போது இப்படி திராட்சை பழங்களைப் போல தோற்றம் பெற்றுள்ளது.
இயற்கையாகவே இப்படியொரு உருவம் பெற்ற Limestone....ஆச்சரியம்தானே!!!
இதற்கு ரோமியோ என பெயரிட்டு அழைக்கிறார்கள்!
செயற்கையாக பல இடங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு இருந்தாலும் இயற்கையே இப்படி பல வடிவங்களை கொடுத்திருப்பது அதிசயம்தானே. மேலும் அங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் வெளிச்சத்தில் ஏதோ குகைக்குள் ஒரு தனி உலகமே தெரிவதுபோல தோன்றியது. அத்தனை அழகுடன் கண்களுக்கு மட்டுமில்லாமல் காதுகளுக்கும் விருந்தளித்து limestoneல் இருந்து எழும்பிய இசை... கேட்டு பாருங்கள், உண்மையிலேயே அதிசயம்தான்!