இன்று திருமன நாள் காணும் என் பெற்றோர்க்காக..........
எனக்கு உயிர் கொடுத்த
தந்தை
எனக்கு உருவம் கொடுத்த
தாய்
பெற்றவர்களாக மட்டும் அல்ல
என் கண்முன்னே தெரியும்
தெய்வங்களாக பார்க்கிறேன் !
என்னை முழுதாக
புரிந்துக் கொண்டவர்களாக……..
என்னென்ன எனக்கு
பிடிக்கும் பிடிக்காது என்பதை
நன்கு தெரிந்தவர்களாக………
தேவை எனக்கு என்று
சொல்லும் முன்னே
நிறைவேற்றுபவர்களாக………
நல்ல கல்வி அறிவையும்
சுகமான வாழ்க்கையும்
அளித்தவர்களாக……..
என் சின்ன சின்ன
சந்தோஷங்களைக்கூட
மிக பிரமாண்டமாய்
கொண்டாடுபவர்களாக…….
என் துயர்களில்
நான் கலங்கும் முன்னே
கண்ணீர் வடிப்பவர்களாக………
இன்றும் மடியில்
சாய்ந்துக்கொள்ளும் என்னை
கொஞ்சுபவர்களாக………..
பேசும்போது
"என்னடா" "எப்படிடா இருக்க"
"சரிடா" "byeடா" என்று
வார்த்தைகளிலும் கூட
அன்பு செய்பவர்களாக……..
இவர்களிடம் இருந்து
இதுவரை கிடைக்கவில்லை
என்ற ஏக்கத்தை
எனக்கு கொடுக்காதவர்களாக………
நான் பிறந்து
தாய் தந்தையாகும் வரத்தை
அவர்களுக்கு கொடுத்திருந்தாலும்
என் அப்பாவின் கண்மணியாக,
என் அம்மாவின் செல்லமாக
செல்லம் கொஞ்சப்படும்
நான் கொடுத்துவைத்தவள்தானே !
எனக்கு உயிர்க்கொடுத்து………..
நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுத்து……….
சிறந்த கல்வி அளித்து………
அழகான ரசனைகளை செலுத்தி……….
அன்பான பாசத்தை ஊட்டி………
சிறுவயதில் கூட
திட்டாமல் அடிக்காமல்
அதே சமயம் சரியான நேரங்களில்
கண்டிக்க தவறாமல்………
பொக்கிஷமாக
பாதுகாத்து வளர்த்த
என் பெற்றோர்க்காக
இக்கவிதை !
நான் குழந்தை பெற்றும்
அவர்களுக்கு இன்னும்
குழந்தையாகவே…….
அந்த செல்ல குழந்தையிடமிருந்து
அன்பான திருமனநாள் நல்வாழ்த்துக்கள் !!!
2 comments:
wonderful! i have no words to tell
from this i've known the importance and love of our parents thanks akka bye...
yes... we'r lucky to've a parents like this !
Thank u Ammu !!!
Post a Comment