சேமித்து வைக்கிறேன்...
காலங்கள் உருண்டோடியும்
கரையாத நினைவுகளோடு
உணர்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள
உன் பார்வை ஒவ்வொன்றையும்!
கடந்து சென்ற காலங்களில்
கண்களினால் கவிதை
எழுதியவன் நீ!
உன் முதல் பார்வையிலே
முழுவதுமாக என்னை சரித்தாய்....
ஆழமான பார்வையில்
அன்பாய் பேசுவாய்
ஆசையோடு பார்த்து
என் வெட்கத்தை சுவைப்பாய்.
நிஜமான உன் நேசத்தால்
நித்திரை பறித்து
பார்வையாலே பாவை இவளிடம்
காதல் புரிவாய்!
நீ கண் அசைத்தால்
நான் மனம் சாய்கிறேன்
உன் பார்வை பட்டதும்
என் சுயம் மறக்கிறேன்.
கண்ணியமான உன் பார்வையால்
இவளில் காதல் பிறக்கும்
காதலான உன் பார்வையால்
என்னில் ஆசைகள் சுரக்கும்
அழுத்தமான பார்வை ஸ்பரிசத்தால்
என் பெண்மை தவிக்கும்...
உன் உயிரில் இணைந்திட துடிக்கும்!
உன் பார்வையின் இன்னும் பல
உண்மைகளை அறிய ... தொடர்ந்து
சேமித்து வைக்கிறேன்
....... உன் பார்வை ஒவ்வொன்றையும்!
14 comments:
ஒரே ஒரு பார்வை என்னவெல்லாம் ரசிக்க வைக்கிறது - எங்களுக்கு...!
வாழ்த்துக்கள்...
ஓவ்வொரு வரியும் உணர்ச்சிக் காவியம் மனம் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்
உன் முதல் பார்வையிலே
முழுவதுமாக என்னை சரித்தாய்....
ஆழமான பார்வையில்
அன்பாய் பேசுவாய்
ஆசையோடு பார்த்து
என் வெட்கத்தை சுவைப்பாய்.
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்...
// உன் பார்வையின் இன்னும் பல
உண்மைகளை அறிய ... தொடர்ந்து
சேமித்து வைக்கிறேன்
....... உன் பார்வை ஒவ்வொன்றையும்! //
அழகான வரிகள்...
பார்வையின் பன் முகம் காட்டும் கவிதை ரசிக்க வைக்கிறது
தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
திண்டுக்கல் தனபாலன் சார்
ரமணி சார்
சரவணன் சார்
சே.குமார்
சங்கவி!
ரசிக்க வைத்த கவிதை,வாழ்த்துக்கள் ப்ரியா!!
அருமை:-)
மிகவும் ரசித்தேன்.
நன்றி மேனகா, நன்றி பாரதி, நன்றி ஜெ.ஜெ!
ஒரு அழகிய பார்வை...
மிகவும் சுவாரஸ்யமான வலைப்பதிவு
Nice
அருமையான கவிதைகள்
Post a Comment