Subscribe:

Pages

Friday, December 4, 2009

அடுத்த பிறவியில்.....


ம்பிக்கை இல்லை
அடுத்த பிறவியில்
உனக்கு.
ஆனால்
நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க.

மனதில் மட்டுமல்ல
உன்னையே முழுதும்
என்னுள் சுமக்க
உன் தாயாக !

காலை விடியலின்
முதல் உருவம் நானென்றாய் !
முதல் உறவாகவே…..
உன் தாயாக !

உன் விழியில் நானென்றாய் !
கண்ணுக்குள் வைத்துன்னை
பாதுகாப்பேன்…..
உன் தாயாக !

கவிதைகளின்
தொடக்கம் நானென்றாய் !
வாழ்க்கையே தொடங்கிவைப்பேன்
உன் தாயாக !

மடி சேர விரும்பினாய் !
என் மடியிலே சேர்த்துன்னை
தாலாட்டு பாடுவேன்
உன் தாயாக !

உடனிருந்தால் அனைத்தையும்
வெல்வேன் என்றாய் !
கற்றுக்கொடுத்து எல்லாவற்றிலும்
வெற்றி காணவைப்பேன்
உன் தாயாக !

உலகை
பரிசளிப்பேன் என்றாய் !
இந்த உலகையே உனக்கு
அறிமுகப்படுத்துவேன்
உன் தாயாக !

என்னை போலொரு
பெண்குழந்தை வேண்டுமென
ஆசை உனக்கு.
உன்னையே
என் சாயலில்
பெற்றெடுப்பேன்
உன் தாயாக !

நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க
உன் தாயாக !

23 comments:

நேசமித்ரன் said...

கனவை நிகழ்த்தி பார்ப்பது வாழ்வோடு ஆடும் ஆட்டம்

:)

அன்புடன் மணிகண்டன் said...

// என்னை போலொரு
பெண்குழந்தை வேண்டுமென
ஆசை உனக்கு.
உன்னையே
என் சாயலில்
பெற்றெடுப்பேன்
உன் தாயாக ! //

மிகவும் கவர்ந்த அட்டகாசமான வரிகள்..

Raghu said...

//உடனிருந்தால் அனைத்தையும்
வெல்வேன் என்றாய் !
கற்றுக்கொடுத்து எல்லாவற்றிலும்
வெற்றி காணவைப்பேன்
உன் தாயாக !//

வெரி நைஸ், ந‌ல்லா எழுதுறீங்க‌!

Unknown said...

// கவிதைகளின்
தொடக்கம் நானென்றாய் !
வாழ்க்கையே தொடங்கிவைப்பேன்
உன் தாயாக ! //

நல்ல இருக்கு இந்த வரிகள் .. பாராட்டுக்கள்..

cheena (சீனா) said...

அன்பின் பிரியா

அழகிய கவிதை - அடுத்த பிறவியில்

இப்பிறவியில் கண்டதை அடுத்த பிறவியில் செயல் படுத்த் நினைக்கும் - கனவு காணும் - அற்புதக் கவிதை.

மிகவும் ரசித்தேன்

நல்வாழ்த்துகள் பிரியா

malarvizhi said...

நல்ல கவிதை . அருமையாக உள்ளது, பிரியா.

சூர்யா said...

என்னை போலொரு
பெண்குழந்தை வேண்டுமென
ஆசை உனக்கு. ennavalidam, naan sonnavai idhu...

சூர்யா said...

nalla irukunga...ovuvuru muraiyum un thaayaga enbathirkku bathil...kadaisaiyil mothamagaa orae oru thadavai mattum sonnal...nalla irukkum

Priya said...

நன்றி நேசமித்ரன்!

நன்றி அன்புடன் மணிகண்டன்!

நன்றி குறும்ப‌ன்!

நன்றி பேநா மூடி!

Priya said...

cheena (சீனா) உங்க தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி!

நன்றி MALARVIZHI!

சூர்யா, //ennavalidam, naan sonnavai idhu...//அந்த அளவுக்கு அவங்க உங்களை இம்பிரஸ் பண்ணிருக்காங்க!உங்க கருத்துக்கு மிக்க நன்றி!

Anonymous said...

க‌விதையில் வ‌ர்ற‌ எல்லா வ‌ரிக‌ளுமே அட்ட‌காச‌மா இருக்கு. வாழ்த்துக்க‌ள்

ஜெனோவா said...

நாந்தான் கடைசியா??
நல்ல விருப்பம் , நல்ல கனவு .. நனவாக வாழ்த்துக்கள் பிரியா !

போட்டோ நல்லாயிருக்கு , நீங்க எடுத்ததா ?

Priya said...

வணக்கம் MAHA, ரொம்ப நன்றி!

வந்துடீங்களா ஜெனோவா...நன்றி! இந்த கவிதைக்கு suitableஆக இந்த படத்தை internetல சுட்டேன்!

Bagavathy said...

அழகாய் மனதை வருடும் வரிகள்

Priya said...

நன்றி sofi!

Menaga Sathia said...

உணர்வுபூர்வமான கவிதை!!

Priya said...

Mrs.Menagasathia........ நன்றி!

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை பிரியா. வாழ்த்துக்கள்.

Priya said...

வணக்கம் ராமலக்ஷ்மி.....
மிக்க நன்றி!

priyamudanprabu said...

நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க
உன் தாயாக !

////////

ம்ம்ம் கடைசி வரிகள் சூப்பர்

Priya said...

பிரியமுடன் பிரபு.......
மிக்க நன்றி!

r.v.saravanan said...

நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க
உன் தாயாக !

கவிதைகளின்
தொடக்கம் நானென்றாய் !
வாழ்க்கையே தொடங்கிவைப்பேன்
உன் தாயாக !

இந்த வரிகளை மிக ரசித்தேன் ப்ரியா வாழ்த்துக்கள்

Priya said...

படித்து ரசித்த உங்களுக்கு நன்றி சரவணன்.

Post a Comment