"ஏன் என்னை ரொம்ப பிடிக்குது"
என்றாள் அவள்
"ஏனென்றால் நீயொரு அழகான லூசு"
என்றான் அவன்
"ஏன் என்மேல் இவ்வளவு லவ்"
என்றாள் அவள்
"நீ உன் லவ்வை சொல்லவே இல்லையே, அதான்"
என்றான் அவன்
"ஏன் நான் எழுதியவைக்கு பதில் இல்லை"
என்றாள் அவள்
"எழுதுவதை மறந்துவிட்டேன்...உன் வார்த்தைகளை கண்டப்பின்"
என்றான் அவன்
"எதுவுமே… இடையூராக இருக்காது, நமது அன்பில்"
என்றாள் அவள்
"யாருமே"
என்றான் அவன்
"உன் உயிர் நான் என்றாயே, நிஜமா?"
என்றாள் அவள்
"...... விட்டால் தெரிந்துக்கொள்வாயா…உனக்காக"
என்றான் அவன்
அவளாக நானும்
அவனாக நீயும்
நம் எண்ணங்களின்
உரையாடல் தொடர்கிறது…..
வேடிக்கையாகவும் வலியோடும் !
4 comments:
வேடிக்கையாய் ஆரம்பித்து வலியோடு முடித்துள்ளீர்கள்...
வணக்கம் மணிகண்டன்... மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு !
உரையாடல் பகுதி நல்லா வந்திருக்கு.
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் ரொம்ப நன்றி...தொடர்ந்து வாங்க.
Post a Comment