Subscribe:

Pages

Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Friday, July 23, 2010

தொடர்ந்திடும் உற்சாகம் !!!

         டலில் சோர்வு என்றால் நன்றாக தூங்கியோ உடற்பயிற்சியாலோ சரி செய்து விடலாம். ஆனால் மனது சோர்வுரும் நேரங்களில் என்ன செய்வது. அப்படிப்பட்ட சமயங்களில் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் புதியதாக ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள்வதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் ஏற்பட்டு நிச்சயம் மனதில் உற்சாகம் பெருகிடும். அப்படிதான் கடந்த இரண்டு மாதமாக நான் யோகா கற்றுக்கொண்டு வருவதும்.

நம் நாட்டில் இருந்தவரை அதைப்பற்றி ஏதும் தெரியாது, தெரிந்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் இல்லை. இன்று ஏதோ ஒன்று என்னை யோகா கற்றுக்கொள்ள தூண்டியது. நம் இந்திய நாட்டிற்கு பலமுறை வந்து முறைப்படி யோகா படித்து பட்டம் பெற்ற ஒரு பிரெஞ்சு பெண்தான் இந்த வகுப்புகளை நடத்துகிறார்.

உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வது எனக்கு பிடிக்கும். அதனால் என் கல்லூரி நாட்களில் இருந்தே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் செய்ய‌ மாட்டேன். சும்மா வீட்டிலேயே கையை காலை அசைத்து குனிந்து நிமிர்ந்து ஏதாவது செய்துக்கொண்டு இருப்பேன். உடற்பயிற்சி வெறும் உடலை மட்டுமா நன்றாக வைத்துக்கொள்ளும், மனதையும் சேர்த்துதானே! அது பற்றாத வேளையிலதான் இந்த யோகா பயிற்சி மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மனதில் தேவையில்லாமல் இருக்கும் கோபம், எரிச்சல், etc.,எதுவாகினும் அதை நீக்கிட யோகா உதவும் என்று நினைக்கிறேன். பொதுவாக நான் எளிதில் உணர்ச்சி வசப்பட மாட்டேன், முக்கியமாக கோபப்படும் விஷயத்தில். அவசியமற்ற கோபம் நம் மனதை அசிங்கமாக்கிவிடும் வாய்ப்புள்ளது. எனவே, நான் என் மனதை எப்போதும் அழகாக வைத்துக்கொள்வே விரும்புகிறேன், சில நேரங்களில் தானாகவே வந்து சேர்ந்திடும் சோர்வுகளை எதிர்த்து!

மனதிற்கு உற்சாகமும் சந்தோஷமும் கொடுக்கக்கூடிய இன்னொரு விஷயம் பரிசுகளும் பாராட்டுக்களும். தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி வரும் பதிவுலக நண்பர்களின் பின்னூட்டங்களும், ஊக்கப்படுத்திவரும் விருதுகளும் இன்னும் என் சந்தோஷத்தை அதிகப்படுத்தி மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது. மீண்டும் ஒரு தங்கமகன்/மகள் விருது தந்த ஜெய்லானிக்கும், அனபாக ஒரு விருது அளித்த ஆனந்திக்கும் எனது நன்றிகள்.


Thursday, May 20, 2010

கலைஞர்களுக்கு என்று ஓர் ஊர்... St.Remy!



தோ மீண்டும் ஒரு விருது! இந்த விருதை எனக்களித்த Jaleela அவர்களுக்கு எனது அன்பான நன்றிகள். ஒவ்வொரு முறையும் விருது வழங்கப்படும் பொழுது முதல்முறை வாங்குவதை போன்றே ஓர் உணர்வு.... அவ்வளவு சந்தோஷம். அந்த சந்தோஷத்துடனே சென்ற பதிவின் தொடர்ச்சியாக என் பயணம் தொடர்கிறது.


            ஒக்ளிஸில்(Vaucluse) இருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் ஊர்தான் St. Remy de Provence.



யற்கை வளம் நிறைந்த‌ நிலப்பகுதி என்பதால் சாலை இருபுறமும் Peech மற்றும் Cherry மரங்கள்  என்று பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.





ரம்பத்திலேயே தென்பட்ட மிக பெரிய ஏரியில் சிறிது நேரம் சுற்றி கொண்டு இருந்தோம். அங்கும் இங்குமாக ஓடி விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்களின் நடுவில் சில பெரியவர்கள் அமைதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். லேசாக தூர ஆரம்பித்தும் அதை யாரும் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. குளிர ஆரம்பித்ததால் என்னால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. அதனால் அங்கிருந்து ஊருக்குள் செல்ல...... நுழையும் போதே ஏதோ ஒரு கலை உணர்வு ஏற்படத் தொடங்கியது.





மே தினம் என்பதால் அந்த ஊர்மக்கள் சில கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர் . பிரான்ஸின் ஒவ்வொரு ஊரின் பாரம்பறிய உடை அனிந்து, ஊரின் மையப்பகுதியில் உள்ள வீதிகளில் அனிவகுப்பு நடத்தினர்.





ந்த ஊருக்கு ஒரு சிற‌ப்பு அம்சம் இருக்கின்றது என்று சொல்லி இருந்தேனே........ அது இந்த ஊருக்கு கிடைத்து இருக்கும் பெயர்தான். அதற்கு காரணமாக இருந்தவர் உலக புகழ் பெற்ற ஓவியர் Vincent Van Gogh அவர்கள்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர் பிறந்ததென்னவோ நெதர்லேன்டில்.... ஆனால் தன் இறுதி காலங்களில் அவர் பிரான்ஸில்தான் இருந்து இருக்கிறார். அதிலும் அவர் வரைவதற்காகவே இந்த ஊருக்கு வந்தவராம். அமைதியான ரம்மியமான இயற்கை காட்சிகளை ரசித்தபடியே வரைய இந்த இடத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இங்குதான் அவர் 150 பெயின்டிங்ஸும் 100 டிராயிங்ஸும் வரைந்திருக்கிறார். இவரை தொடர்ந்து இந்த ஊரில் நிறைய ஆர்டிஸ்ட்டுகள் உருவாக தொடங்கி உள்ளனர். தெருவுக்கு தெரு பார்க்கும் இடமெங்கும் ஆர்ட் கேலரிகள். ஒவ்வொரு பெயின்டிங்கும் 1000, 2000 யூரோக்கள் என்று விற்கப்படுகிறது. (நம்மூர் மதிப்புக்கு 60ஆயிரம், லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்.....) பெயின்டிங்ஸை தொடர்ந்து கண்ணாடியில் வரைவது, பீங்கான் பொருட்களில் வரைவது.... என்று பலத்தரப்பட்ட கலைஞர்கள் இருப்பதால் The village of Artists என்ற சிறப்பு பெயர் பெற்று விட்டது…. இந்த ஊர் !

பல புகழ்பெற்ற‌ கலைஞர்களையும் அவர்கள் படைப்புகளையும் பார்த்து விட்ட வந்த சந்தோஷத்தில் (நீண்ட நாட்களாக வரையாமல் இருந்த எனக்கு) மீண்டும் வரையும் ஆர்வம் வந்துவிட்டது. விரைவில் புதியதாக வரைந்த படத்துடன் வருகிறேன்.

Friday, April 30, 2010

மீண்டும்....மீண்டும்.....!!!

மீண்டும் ஒரு விருது!


  இந்த வைர‌ விருதை வடிவமைத்து வழங்கிய ஜெய்லானிக்கு நன்றிகள் பல!


******************************


மீண்டும் அதே இடம்!

       ரண்டு வாரம் முன்பு வரை இங்கு டிவியில் இதுதான் ஹாட் நியூஸாக இருந்தது. Islandல் எரிந்துக்கொண்டிருந்த எரிமலையின் காரண‌மாக அந்நாட்டில் மட்டுமன்றி வானம் எங்கும் பரவிக்கொண்டிருந்த புகைமண்டலம் சில ஐரோப்பிய நாடுகளையும் சூழ்ந்துக்கொள்ள, சில நாட்களாக இங்கு( பிரான்ஸ்) நாடும் முழுதும் விமான போக்குவரத்து Paralysed ஆனது. கடந்த திங்கள் அன்று என் வீட்டு எதிரில் வானம் மேகமூட்டதுடன் இருண்டு போய் இருந்ததைப் பார்த்து அந்த எரிமலையின் புகையால்தானோ இப்படி என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளை இவ்வளவு தூரம் வர விடாமல் காற்று அந்த புகைமண்டலத்தை கலைத்து விட்டது. எப்பொழுதும்  அதிசயமாகவே காட்சி அளிக்கும் வானம் இம்முறை இப்படி கறுத்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! இருண்டுபோனாலும் வானம் அழகாகத தோன்ற மீண்டும் என் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக எடுத்த‌ படம்! 






இதேப்போல் என் வீட்டு எதிரில் இருந்து எடுத்த சில‌ படங்கள் இங்கே!!!

Thursday, April 1, 2010

ஒரு கவிதை... ஒரு ஓவியம்... ஒரு விருது!




விக்கின்ற ணர்வுகள்

னம் புரியாத ஓர் உணர்வு
உணர்ச்சிகளின் முழு வடிவமாக இன்று !

பலமுறை பல கேள்விகளை
எழுப்பிய உணர்வு !
பதில் யோசித்து யோசித்து
அதில் என்னை மறந்த உணர்வு !

சந்தோஷங்களில் மூழ்குகின்ற‌ உணர்வு !
கண்ணீரிலும் கரைகின்ற‌ உணர்வு !
உண‌ர்வுக‌ள் அலைமோதிட‌
உணர்ச்சிக‌ள் த‌தும்ப‌
இத‌ய‌த்தின் ஆழ‌த்தில் எழுதிய‌ உண‌ர்வு !

பலப்பல கற்பனைகளை
வளர்த்த உணர்வு !
சில கவிதைகளையும்
படைத்த உணர்வு !

எண்ணற்ற மாற்றங்களை
என் உள்ளம் சந்தித்த போதிலும்
மாறாதொரு உணர்வு !
அதே உள்ளம்
சோகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு
உயிர் இழந்து
முடிவாக எத்தனையோ விஷயங்கள்
மறந்த போதிலும்
மறக்காதொரு உணர்வு !

சொல்ல தவறிய வார்த்தைகளுக்காக‌
இன்று சொல்ல நினைத்தும்
முடியாமல் தவிக்கின்ற‌ உணர்வு !

சொல்லாமலே உள்ளுக்குள்
உறைந்து கிடக்கும் உணர்வு !
இறுதிவரை என்னுள்ளே
வாழ்ந்து கொண்டிருக்க போகும் உண‌ர்வு !
இதுவும் சுகமாக எனக்கு !


*******************************************************


ச்சும்மா வரைஞ்சது !!!




***********************************************************


திவுலகில் சில வாரங்களாக தொடர் பதிவுகள்.... விருதுகள்.... என்று தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. எனக்கு கிடைத்து இருக்கும் இரண்டாவது விருது இது.


இந்த விருதை அளித்த தோழி பத்மாவுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். மிகவும் சந்தோஷத்துடன் இந்த விருதினை நானும் சில நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



Friday, December 18, 2009

மிஸ் ப்ளாக்கர் !!!




ஊரெங்கும் மிஸ் வேர்ல்டு, மிஸ் பிரான்ஸ் அழகிபோட்டி நடந்துவரும் வேளையில், எனக்கு கிடைத்திருக்கு இந்த விருது என்னையும் ஒரு மிஸ் ப்ளாக்கர் ( இது கொஞ்சம் ஓவர்தான்...) மாதிரி நினைக்க தோனுது!

இந்த விருதினை வழங்கிய குறும்ப‌ன் அவர்களுக்கு மிக்க நன்றி.






எனக்கு கிடைத்த இந்த சந்தோஷத்தை(விருதை)இவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்!

ஜெனோவா

மலர்விழி