Subscribe:

Pages

Showing posts with label பூக்கள். Show all posts
Showing posts with label பூக்கள். Show all posts

Tuesday, April 19, 2011

இறைவன் வரைந்த ஓவியங்கள்....

                ரு வழியாக குளிர் குறைந்துவிட்டது... காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் அழகாக இன்னும் அழகாக மெருகேற்றிக்கொண்டிருக்கும் இயற்கையினை, இறைவனால் வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களை ரசித்திட இருக்கண்கள் போதாது. ஊரெங்கும் மலர்ந்திருக்கும் மலர்களோ பல விதங்களில் பல வண்ணங்களில் அழகாய் காட்யளித்துக்கொண்டிருக்கிறது.

உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க போகும் கீழே மலர்ந்திருக்கும் படங்கள் சென்ற வாரத்தில் எடுத்தது. ஏதோ மலர் கண்க்காட்சியில் எடுத்தது என்று நினைப்பீர்களானால் தவறு! எங்கள் வீட்டில் இருந்து சுமார் பத்துகீமீ தொலைவிற்குள்ளே சாலைகளின் ஓரங்களில் மரங்களிலும், செடிகளிலும், மட்டுமல்லாமல் கொடிக‌ளில் மலர்ந்தும், நிலத்தினில் படர்ந்தும் இருக்க... மனதை கொள்ளைக்கொள்ளும் இந்த மலர்களை மிகவும் ரசித்து படம் பிடித்தேன்.

































என் வீட்டு பூந்தொட்டியில் மலர்ந்திருக்கும் மலர்கள்....

ழுத்துக்களை கோர்த்து வாக்கியங்களாக்குவதை விட வண்ணங்களை குழைத்து ஓவியங்களாக்குவதே மிக சுலபமானதாக இருக்கிறது எனக்கு.
எழுதுவதற்கு தேவைப்படும் நேரத்தைவிட வரைவதற்கு தேவையான நேரம் குறைவு என்பதாலும் எப்பொழுதும் குறையாத கலை ஆர்வம் தொடர்வதாலும் கடந்த சில நாட்களாக‌ நிறைய‌ வரைந்துக்கொண்டிருக்கிறேன்.

இறைவன் படைத்த‌ ஓவியங்களோ அற்புதம்... அதற்கு நிகர் இல்லை என்பதால் அவற்றை ரசித்தபடியே இதோ நான் வரைந்த Magnolias roses(30x60cm)!



Tuesday, July 27, 2010

கொஞ்சம் வரைந்துதான் பாருங்களேன்!!!

                  சாதாரணமாக வரைய தெரிந்திருந்தாலே போதும் உங்கள் வீட்டு வரவேற்பரை சுவரில் நீங்களே வரைந்த படத்தைக்கொண்டு அழகுப் படுத்திட முடியும். இதற்கு நன்றாக வரைய தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. பொதுவாக எல்லோருக்கும் ஒரு சிறு பூவாவது வரைய தெரிந்து இருக்கும் இல்லையா! அதனால் அதற்கு எப்படி வண்ணங்கள் தீட்டுவது என்று பார்ப்போம்.


அதிக வண்ணங்கள் கூட அவசியமில்லை. தேவையானவை 5 அல்லது 6 நிறங்கள் அது வாட்டர் கலரா அல்லது ஆயில் கலரா என்பது உங்க விருப்பம். (இங்கே நான் பயன்படுத்தி இருப்பது ஆயில் பெயிண்ட்) 50 x 70cm அள‌வில் ஒரு பெரிய தாள் அல்லது கேன்வஸ் போர்ட், இரண்டு பிரஷ், பென்சில் கூடவே கொஞ்சம் பொறுமை நிறைய ஆர்வம்... !

செம்பருத்தியோ ரோஜாவோ அல்லது தாமரையோ முதலில் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பூவை ஒன்றின் பக்கம் ஒன்றாக பெரியதும் சிறியதுமாக‌ நான்கைந்து பூக்களை பென்சிலால் வரைந்துக்கொள்ளுங்கள். இலைகள் கூட அவசியமில்லை. இங்கே நான் வரைந்திருப்பது ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பூக்கும் ‘கொக்லிக்கோ’(Coquelicot(Fre.) - Poppy(Eng.)) மலர்கள்.


எப்போதும் வண்ணங்களை தேர்ந்தெடுப்பதில்தான் அதிக கவனம் தேவை. முதலில் டார்க் கலரை கொண்டு பூக்களற்ற மற்ற பகுதியில் பெயிண்ட் பண்ணுங்க. அது உங்க வீட்டு வரவேற்பரையில் உள்ள கர்ட்டன் கலரிலோ... டேபிள் க்ளாத் கலரிலோ இருந்தால் கூடுதல் அழகை கொடுக்கும்.

வெறும் ஒரே நிறத்தைக்கொண்டு தீட்டாமல் ஓரங்களில் கொஞ்சம் கருப்பு நிறத்தையும் உட்புறமாக கொஞ்சம் வெள்ளையும் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.



அடுத்து பூக்களுக்கான நிறத்தை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். சிகப்பு, ஆரஞ்சு, பிங்க், நீலம்..... இப்படி எந்த நிறமாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் ஏற்கனவே தாளில் கொடுக்கப் பட்டிருக்கும் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட் ஆக‌ இருந்தால் பார்க்க பளிச்சென்று இருக்கும். பூவிதழ்களின் ஓரங்களில் கொஞ்சம் அழுத்தமாக, டார்காகவோ அல்லது லைட்டாகவோ வண்ணம் தீட்டினால் ஒவ்வொரு இதழ்களும் தனித்தனியாக தெரியும். பூத்தண்டுகளுக்கு பச்சையும் இடையிடையே கொஞ்சம் கருப்பு நிறமும் கலந்து அடித்து விடுங்கள்.





பொருத்தமாக ஃபிரேம் செய்து விட்டால், அவ்வளவுதான்.... ஒரு சிம்பிளான பெயிண்டிங் ரெடி! காசுக் கொடுத்து வாங்கும் பொருளை விட நாமே தீட்டிய ஓவியத்தைக்கொண்டு வீட்டை அழகுப்படுத்துவது சந்தோஷம்தானே! உங்களுக்குள் இருக்கும் வரையும் திறனை வெளிக்கொண்டு வரும் சிறு முயற்சியாக இது இருக்கட்டுமே.. கொஞ்சம் வரைந்துதான் பாருங்களேன்!