தொடர்ந்து வந்த இரண்டு நாள் விடுமுறையை இருவருமாக ரசித்து கழிக்க இம்முறை நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் Fontaine de Vaucluse..... பசுமையும் குளிர்ச்சியும் நிறைந்த அழகான இடம்.
மே மாதம் தொடங்கிய நிலையிலும் சரியான சூரிய வெப்பம் இல்லாமல் அந்த இடமே குளிர்ச்சியாக இருந்தது. சுற்றிலும் பசுமை என்று நம் தென் இந்தியாவின் கேரளாவை நியாபகப்படுத்தியது, தென் பிரான்ஸின் இந்த ஒக்ளிஸ்(Vaucluse).
அரசு விடுமுறை நாள்(1st May) என்பதால் சிறுவர்கள் பெரியவர்கள் என்று ஓரே கூட்டம்தான். வயதான சில பெரியவர்கள் கூட பயமோ தயக்கமோ இன்றி மலைப் பாறைகளை தட்டு தடுமாறி ஏறினார்கள். அவர்களை தொடர்ந்து நாங்களும் பாறைகளை கடந்த போது அங்கு எந்த ஒரு சலனமும் இன்றி அமைதியாக இருந்தது நீரோடையின் ஊற்று.
நீரோடையுடனே... Crystal Gallery, Painting Gallery மற்றும் மிடில் ஏஜ் பீரியட்டில் தாள்கள் செய்ய உருவாக்கப் பட்ட தொழிற்சாலை என்று இந்த இடம் மேலும் சில சிறப்பு அம்சங்களை கொண்டிருந்தது.
அங்கு இருந்து ஒவ்வொரு மணி துளியும் ஜில்லுன்னு சுகமான ஒர் உணர்வு. கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டு இருந்த தண்ணீரை போலவே மனதும் கட்டுபாடுகள் அற்ற குழந்தையாய் துள்ளி திரிந்தது.
இதற்குமேல் அதன் அழகினை நான் சொல்வதை விட, வாருங்கள் என்னுடன்….... அதன் பசுமையையும் குளிர்ச்சியையும் ஒன்றாக சேர்ந்து ரசித்திடலாம்.
கார் பார்க்கிங் பக்கத்திலே அமைதியாக சென்ற நீரோடை...
ஹைட்ரோ பவர் டெவலெப்மென்டுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கும் வாட்டர் வீல்
ஓடையின் மேல் அமைந்துள்ள உணவு விடுதிகளுக்கு செல்ல அமைக்கப்பட்டிருந்த சிறிய பாலம்!
பாலத்தை கடந்ததும் அழகான பச்சை நிறத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர்.........
தண்ணீரில் சாகசம் புரிந்துக்கொண்டு இருப்பவர்கள்........
என்ன ஒரு நிறம்.... ?!
கரையை ஒட்டி இருந்த பேப்பர் தொழிற்சாலை.
பேப்பர் செய்ய பயன்படுத்தப்பட்ட அக்காலத்து மர கருவிகள். அம்முறைப்படியே இங்கு இன்னும் தாள்கள் செய்கின்றார்கள். இதன் பக்கத்திலேயே பல விதமான பேப்பர்களை கொண்டு மிக பெரிய ஹாலில் எக்ஸிபிஷன் நடந்தது. ஃபோட்டோ எடுக்க தடைச் செய்யபட்ட இடம் என்பதால் அதை படம் எடுக்க முடியவில்லை.
அங்கிருந்து வெளியே வரும் நம்மை மீண்டும் வரவேற்று கொள்கிறது பசுமை!
அப்படியே தன்ணீரில் விழுந்து கும்மாளம் போட மனசு துடிக்கிறது இல்லையா... ஆனால் தண்ணீரில் காலைக்கூட வைக்க முடியாத அளவில் குளிர்!
இதன் அழகில் மயங்கிவிட... இதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை!
ஓடையின் அழகை ரசித்துக்கொண்டே பாறைகளையும் கடந்து இப்போது நாம் வந்து சேர்ந்து இருக்கும் இடம்... ஓங்கி உயர்ந்து நின்ற மலையடிவாரத்தில் இருக்கும் ஊற்று. பார்ப்பதற்கு கண்ணாடி போல் இருக்கின்றது இல்லையா!
நடந்து நடந்து சற்று களைத்துவிட, பசியும் எடுத்துவிட்டது அல்லவா.... சாப்பிட இடம் தேட... இதோ கிடைத்து விட்டது ஓடையின் பக்கத்திலேயே!
ஜில்லுன்னு இருந்தாலும் அதுவே சுகமாக இருக்க ஓடையின் ஓரமாக அமர்ந்து சாப்பிட நமக்கு துணையாக வந்து சேர்ந்துக்கொண்டது இந்த வாத்துக்கள்.
கடைசியாக பூக்களுடன் விடைபெற்று கொள்வோம்.
ஜில்லுன்னு ஒரு பயணம்.... எப்படி இருந்தது? தண்ணீரிலே இருந்திட மனசு ஏங்குகிறதா? எனக்கும் கூட அன்று அந்த இடத்தை விட்டுவர மனமே இல்லாமல்தான் கிளம்பினேன்.
அங்கிருந்து மீண்டும் பக்கத்தில் இருக்கும் St. Remy என்னும் இன்னொரு ஊருக்கு பயனமானோம். அந்த ஊருக்கு என்று ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. அது என்ன என்பதும், அங்கு எடுத்த படங்களுடனும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.