ப்ரியமான
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தொடர்ந்து பதிவுகளிட்டு
எனது வலைதளத்தை உயிரோட்டமுள்ளதாக
வைத்திருக்கவே விரும்புகிறேன்.
ஆனால் பல சமயங்களில்
அது முடியாமலே போகிறது.
எழுதுவது குறைந்து
போனாலும் வரைவது மட்டும்
தொடர்ந்துக்கொண்டுதான்
இருக்கிறது. அதிலும்
பென்சிலால் வரைவதில் ஆர்வம்
அதிகரித்து உள்ளது. இதற்காக
நிறைய நுணுக்கங்களை கற்றுகொள்வதில்
ஆரம்பித்து சிறந்த ஆர்ட்
மெட்டிரியல்களை தேடி தேடி
பார்த்து வாங்கி கொண்டிருக்கிறேன்.
கடந்த வருடத்தில்
வரைந்த சில சித்திரங்களை
இனி வரும் பதிவுகளில் உங்கள்
பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.
அதில், நான்
மிகவும் விரும்பி....பல
காலமாக வரைய நினைத்ததுதான்
இங்கு நீங்கள் காண்பது.
பைபிள்
கூறும் வசனங்களில் எனக்கு
மிகவும் பிடித்த வசனம் இது.
'நானே
நல்ல மேய்ப்பன்'..... நீண்ட
நாட்களாக இதற்கு ஏற்றபடி ஒரு
படம் வரைய வேண்டும் என
நினைத்திருந்தேன்.
விரும்பியபடியே
ஒரு வாழ்த்து அட்டையில்
இருந்த படம் என்னை கவர,
அதை
பார்த்து வரைந்திருக்கிறேன்.
இம்முறை
A5
தாளில்,
HB, 2B-6B பென்சில்களை
உபயோகித்து வரைந்தேன்,
வரைந்து
முடித்தபோது மனது முழுவதும்
மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
11 comments:
மிக மிக அற்புதமான ஓவியம்
ஏசுவின் அன்பின் வெளிப்பாட்டையும்
அதை அனுபவிக்கும் ஆட்டின் சுகத்தையும்
அற்புதமாகக் காட்டும் ஓவியம்
இதை ஆயிரம் கவிதைகள் மூலம் கூட
மிகச் சரியாக இதைப்போல் சொல்லமுடியாது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அருமையாக வரைந்து இருக்கிறீர்கள்.
ஆட்டுக் குட்டியை கருணையாய் நோக்கும் முகம் அழகாய் இருக்கிறது.
ரமணி சார் சொல்வது கருணையின் கத கதப்பை அனுபவிக்கும் ஆட்ட்டுக் குட்டியும் அர்ருமை.
beautiful art
நுணுக்கமான ஓவியம் மிகவும் அருமை... தொடர்ந்து எழுதுங்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பிரியா
ஓவியம் பார்க்கும் போது மகிழ்ச்சி மகிழ்ச்சியும் மன நிறைவும் தருகிறது
தலைப்புக்கு மிகவும் பொருத்தமான அழகான சித்திரம்.அசப்பில் படம் எடுத்ததுபோல் இருக்கிறது..
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி ரமணி சார்!
மிக்க நன்றி கோமதி அரசு!
தேங்க்ஸ் சிவா!
தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன் சார், பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்!
நன்றி சரவணன் சார், உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி KParthasarathi !!!
படம் அற்புதம்...
மிக்க நன்றி சே. குமார்!
ஒவியத்தை பார்த்து மனதில் தோன்றிய வரிகள் ....
தினம் "ஆடு" கின்றன நம் மனதினை
அன்பினால் அறவனைத்தால்
அடங்கிவிடும் மனம் தஞ்சம் - அன்று
உன் விழிகளில் தெரியுமே புது பிரபஞ்சம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரியா !
வாவ்.. கிரேட் .. நான்கு வரிகளில் நன்றாக எழுதி இருக்கிங்க.. நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா !!!
Post a Comment