Subscribe:

Pages

Sunday, November 11, 2012

மீண்டும் உங்களோடு.....

 

      "நான் இந்தியாவுக்கு போறேன்"... என தெரிந்தவர்களிடம் எல்லாம் சந்தோஷத்துடன் சொல்லிக்கொண்டிருந்த நான் அதே மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இந்த வருட தொடக்கத்திலே தாய் நாட்டிற்கு பயணமானேன். இதுவரை வெளியூர்களுக்கு தனியாக சென்றிராத நான் முதல்முறை அதுவும் தனியாக விமான பயணம் எனும்போது, விமானத்தில் நம் பக்கத்து சீட்டில் யார் வந்து அமர போகிறார்கள் என்பதில் ஆரம்பித்த சுவாரஸியம்... பயணம் முழுவதும் தொடர்ந்து, நொடிக்கொரு தரம் மாறும் காட்சிகளுடன், நிறைய புதுமுகங்களின் அறிமுகங்கள், வண்ணமயமான அனுபவங்கள் என எல்லாமே சேர்ந்து என்னை புதுப்பித்துக் கொடுத்தது.

ஐந்து வருடத்திற்கு பிறகு என்பதால் ஊரில் நிறைய மாற்றங்களை காண முடிந்தது. 'தானே'விற்கு பிறகு சற்று பொலிவு இழந்திருந்ததாலும் புதுச்சேரி தனக்கே உரிய அழகுடன் இருந்தது மனதிற்கு நிறைவை தந்தது. தேடிச்சென்று பார்த்துவிட்டு வந்த சொந்தங்களால் சந்தோஷம் என்றாலும் என்னை தேடி வந்த பார்த்த எனது நண்பர்களால் அளவில்லா சந்தோஷம் கொண்டேன். இழந்து போய்விட்டதாய் நான் நினைத்திருந்த சில நட்புகளை புதுப்பித்துகொள்ள முடிந்தது. குடும்பம் குழந்தை என வாழ்வில் கொண்ட மாற்றங்கள் எதுவுமே எங்களது நட்பினை மாற்றவில்லை எனும்போது...என்னசொல்வது, மனம் மகிழ்ந்தது!


 
(புதுச்சேரியின் அடையாளமாக வீற்றிருக்கும் காந்தி தாத்தாவை சுற்றி படத்தில் இருப்பது... எங்க வீட்டு தோட்டத்து மாங்காய்கள், நான் போட்ட கோலம், எங்க வீட்டு செல்ல புஜ்ஜி&குட்டிமா, அம்மாவின் கைமணத்தில் சில்லி சிக்கன், ஆசையாக பூ தொடுக்கும் நான், கடற்கரை மணலில் என்னவருக்காக‌ எழுதிய அன்பின் மொழி)

எனக்கே எனக்கான சின்ன சின்ன ஆசைகளை எல்லாமே சந்தோஷமுடன் நிறைவேற்றிக்கொண்டேன். காலையில் கண் விழிக்கும் முன்னே கேட்கும் காக்கா குருவிகளின் சத்தம், எந்நேரமும் கேட்டுக்கொண்டிருக்கும் வாகனங்களின் இரைச்சலும், எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும் மனித பேச்சுக்கள்... என இவைகள் எல்லோமே... சுத்தமாக துடைத்து வைத்தாற்போல் அமைதியாக இருக்கும் இங்கே ஒருபோதும் கிடைப்பதில்லை. மாலையில் பைக்கில் செல்லும்போது தொட்டு செல்லும் தென்றலின் இனிமையும் அது தரும் சுகமும், நிச்சயமாக கண்ணாடி கதவை மூடிக்கொண்டு செல்லும் காரில் கிடைப்பதில்லை. எத்தனை உயர் தரமான ரெஸ்டாரன்டிலும் கிடைக்காத சுவை, அம்மாவின் கையால் சமைக்கும் போது மட்டும் கிடைக்க, அனுதினமும் சுவைத்து மகிழ்ந்தேன். உண்மையிலே நீ நல்லா சமைப்பியா என கேட்ட என் தம்பி தங்கையிடம் நான் அங்கு வரும் போது நிச்சயமாக நிருபிக்கிறேன் என சொல்லியிருந்தேன். ஆனால் சொன்ன படி அவர்களுக்கு எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை காரணம் என் அம்மாவின் கைமணத்தில் நான் உண்டு மகிழ்ந்து..... சமைப்பதையே மறந்தேன். அங்கிருந்த ஒவ்வோரு நாளும் என் தங்கையுடன் கழித்த நாட்கள் மிக இனிமையானவை. என்னுடைய தோழிகளை விட என் தம்பி தங்கையின் நண்பர்களுடன் கழித்த பொழுதுகளே அதிகம். அக்கா அக்காவென அன்புடன் அழைத்து என்னை சிரிக்க வைத்து அவர்கள் பொழிந்த பாச மழையில் சுகமாய் நான் நனைந்தேன்.

இனிமையாக நகர்ந்த சென்ற நாட்களில் மனதை மட்டுமல்ல உடலையும் ரனப்படுத்திய சாலை விபத்து மட்டும் தீராத அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. சிறிய ஊராகிய புதுச்சேரியில் அளவுக்கு அதிகமான ஜனத்தொகையால்... போக்குவரத்து மிக மோசமாகி வருவது வருந்தவைக்கிறது. விபத்தின் பயம் ஒரு பக்கம் இருந்தாலும் , நடந்த அடுத்த நொடியே முன்பின் அறியாத முகங்களானாலும் ஓடி வந்து உதவிய அந்த மனித அன்பிற்கு ஈடு இனை எதுவும் இல்லை என்றுதான் சொல்வேன். விபத்து என்பது இத்தனை பாதிப்புக்குள்ளாக்குமா என உணர வைத்து, உயிரின் மதிப்பை புரிய வைத்தது. உண்மையிலேயே கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு வரமாக நினைத்து வாழ கற்றுக்கொடுத்தது.

நிறைய புதுமுகங்கள் அதனால் கிடைத்த‌ அனுபவங்கள்... நான் ரசித்து, நேசித்த நிமிடங்கள், யோசிக்க வைத்த சம்பவங்கள், மனதை பாதித்தவைகள்... என‌ எனக்குள் சேமித்துக்கொண்டதை, சில சமயம் நேரமில்லாமலும் பல சமயம் ஆர்வம் இல்லாமலும் எழுத நினைத்தும் எழுதாமல் இருந்துவிட்டேன். ஆனாலும் தொடர்பில் இருந்த பதிவுலக நண்பர்களால் மீண்டும் எழுத தோன்றியது. இதோ பயணம் தந்த புத்துணர்வுடன் மீண்டும் தொடர்ந்து எழுத நினைத்திருக்கிறேன்.(இந்த இடைப்பட்ட நாட்களில் என்னுடைய முந்திய‌ பதிவுகளுக்கு பின்னூட்டம் அளித்த நண்பர்களுக்கு என் அன்பான நன்றிகள்).

ஒன்றல்ல இரண்டல்ல முழுவதுமாக எட்டு மாதங்கள் அங்கிருந்த ஒவ்வொரு நாளும் எனக்கே எனக்காக நான் வாழ்ந்த நாட்களது.



12 comments:

r.v.saravanan said...

ஒன்றல்ல இரண்டல்ல முழுவதுமாக எட்டு மாதங்கள் அங்கிருந்த ஒவ்வொரு நாளும் எனக்கே எனக்காக நான் வாழ்ந்த நாட்களது.

வாழ்த்துக்கள் பிரியா


எனக்குள் சேமித்துக்கொண்டதை, சில சமயம் நேரமில்லாமலும் பல சமயம் ஆர்வம் இல்லாமலும் எழுத நினைத்தும் எழுதாமல் இருந்துவிட்டேன். மீண்டும் எழுத தோன்றியது.


எழுதுங்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள்... பகிருங்கள்... துன்பம் தொலைந்து போகும்... போகட்டும்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Raghu said...

வெல்கம் பேக் ப்ரியா....

// எத்தனை உயர் தரமான ரெஸ்டாரன்டிலும் கிடைக்காத சுவை, அம்மாவின் கையால் சமைக்கும் போது மட்டும் கிடைக்க//

உண்மை.....இப்போ கூட கொஞ்சம் பச்சை மிளகாய் போட்டு கெட்டியா சட்னி அரைச்சு வெச்சிருந்தாங்க. "சூப்பரா இருக்குமா"ன்னு சொன்னதோட, ஒரு நாள் சேமியா உப்புமாவுக்கு இதே மாதிரி சட்னி செய்ய சொல்லி நேயர் விருப்பம் கேட்டிருக்கேன் :))

உப்புமா சட்னி எல்லாம் ஹோட்டல்ல கூட கிடைக்கும்தான். ஆனால் அம்மா, ingredients கூட கொஞ்சம் பாசத்தை சேர்த்துடறாங்க. இது எந்த ஹோட்டல்லயும் கிடைக்காது.

அதிகம் கேப் விட்டுடாதீங்க...தொடர்ந்து எழுதுங்க.

Priya said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சரவணன் சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபாலன்!

நன்றி ரகு, கேப் விடாம எழுத முயற்சி பன்றேன். பாசத்தோடு சமைக்கும்போது நிச்சயம் சுவை கூடத்தான் செய்கிறது... அதுவும் அம்மா செய்கிறபோது.. அதன் சுவையே தனிதான்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ரகு!!!

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்... எழுதுங்கள்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

எழுத்தைப் படிக்கும்போதே பரவசமாக இருக்கிறது பிரியா. என்னை நினைவு இருக்கிறதா:)
சென்னையும் வந்திருக்கலாமே,. இனிய கார்த்திகை நாட்கள். சுவையோட நடக்க என் வாழ்த்துகள். படம் அருமை.

Priya said...

மிக்க நன்றி சே.குமார்!

@வல்லிசிம்ஹன்
// என்னை நினைவு இருக்கிறதா:)//... மன்னிக்க‌னும், நியாப‌க‌ப்ப‌டுத்தினால் ந‌ல்லா இருக்கும்:‍)
//சென்னையும் வந்திருக்கலாமே//... அங்கிருந்தவரை மாதம் ஒருமுறையாவது சென்னைக்கு வந்து சென்றேன்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு பிரியா ரணங்கள் ஆறியிருக்கும் என்று நம்புகிறேன். உங்களை Qப்ளிக்கரில் பார்த்திருக்கிறேன். இன்னோரு பிரியாவோடு உங்களைச் சேர்த்துவிட்டேன்மா. எதாக இருந்தால் என்ன. அருமையான படங்களுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரரின் அறிமுகம் கிடைத்தது. :)

puduvaisiva said...

welcome back Priya !!!

Unknown said...

Vaanga Vaanga thangal varavu Nal varavu aaguga..

Mahi said...

உங்க பதிவை எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியலை, இப்பதான் பார்க்கிறேன்.

மீண்டும் உங்க படைப்புகளைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ப்ரியா! சாலைவிபத்தா? கேட்கவே பயமா இருக்கே, நல்லபடியாய் மீண்டு வந்ததில் நிம்மதி. டேக் கேர்!

Priya said...

@வல்லிசிம்ஹன்.... எனக்கும் தங்களின் அறிமுகம் கிடைத்ததில் அதிகம் சந்தோஷம்:-)

@puduvai siva... :-)

@Siva sankar.... :-)

ஹாய் மகி, நலமா.. கொஞ்சம் தாமதமானாலும் மிஸ் பண்ணாம வந்திட்டீங்களே:-‍)
ஆமா மகி, எனக்கும் என் அம்மாவுக்கு ஒரு சிறிய விபத்து.. அதை தொடர்ந்து என் உறவினருக்கு மிக பெரிய விபத்து என கலங்கடிச்சிடுச்சி.. இப்போ ஓகே இறைவனின் அருளால் அனைவரும் நலமுடன் இருக்கிறோம். நன்றி மகி.

Post a Comment