Subscribe:

Pages

Wednesday, September 30, 2009

நிழலா நிஜமா.....

நிழலா நான் நிஜமா
நிழலானால்
என்றுமே உன் அருகிலே.
நிஜமானால்
உன்னை விட்டு வெகுதூரமே….

நினைப்பதை
நிறைவேற்றுவது எளிது
நிழலில்.
ஆனால் நிஜமோ….
எதிர்பார்க்கவைத்து……
காத்திருக்கவைத்து……
ஏங்கவைக்கும்…………………

நிழலோ
கனவு காணவைக்கும்.
நிஜமோ
உன்னையே மறக்கவைத்துவிடும்.
வேண்டாம் அன்பே
வாழ்க்கையே மாற்றிவிடும்
நிஜம் - உன்னனவிட்டு
விலகியே இருக்கட்டும்.
நிழலாக என்றும்
உன் நினைவுகளில் !

4 comments:

கலகன் said...

//நிழலானால்
என்றுமே உன் அருகிலே.
நிஜமானால்
உன்னை விட்டு வெகுதூரமே….//

ரசித்த வரிகள்..

காதலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்களை உங்கள் கவிதைகளில் எதிர் பார்கிறேன்...

Priya said...

//காதலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்களை உங்கள் கவிதைகளில் எதிர் பார்கிறேன்...//...
முயற்சி செய்கிறேன்!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தர்மா!

Anonymous said...

hey hey
hey

am the first

so cute last lines

உன்னனவிட்டு
விலகியே இருக்கட்டும்.
நிழலாக என்றும்
உன் நினைவுகளில் ..i like it

Priya said...

நன்றி Complan Surya!
ரெண்டாவதா இருந்தாலும் //am the first// இப்படிதானா:)

Post a Comment