Subscribe:

Pages

Sunday, July 10, 2011

தீராத பார்வைகள்...!


சங்காத பார்வை
என் உரிமை நீ
என சொல்லாமல்
சொல்லும் பார்வை!

இந்த பெண்ணிற்கென்ற
கனவு உலகில் நுழையும்
அதிகாரம் பெற்று
என் கனவுகளையும்
காட்சிகளாக்கும்!

ஒரு நிமிடப்பார்வை
 உயிர்வரை இனிக்கும்
மறு நிமிடப் பார்வையோ
யுக யுகமாய் நீடிக்கும்!

வார்த்தைகளற்ற பொழுதுகளில்
மனதில் வழியும் நேசம்
க‌ண்க‌ளில் மின்ன
புன்னகைத்து பேசிச் செல்லும்!

உன் விழி தீண்ட‌லில்
என் பெண்மை விழித்துக்கொள்ள‌
வெட்கை போர்வைகொண்டு
உன் முகம் பார்க்க
முடியாமல் தவிக்க வைக்கும்!

அணைக்க மறந்து
விரல் கூட தீண்டிடாமலே
பார்வை ஸ்ப‌ரிச‌ங்க‌ளாகி
உள்ளம் தொட்டு
உயிரில் தங்கும்!

தீராத உன் பார்வைகள்
தித்திக்கும்
நித்தம் என்னை அழகாக்கும்!

காணும் நொடிகளில்
எனக்குள் உன்னை தேடி
கண்டெடுக்க முடியாமல்
என்னுயுரிலே கலந்து
உணர்வுகளின் உச்சத்தை
தாங்கி நிற்கும்!

பார்வையின் வேகம்
வ‌தைத்தாலும்
செதுக்குகிறது என்னை!

உன் விழித்தீண்ட‌
யாசிக்கும்
என் கவிதைகளானாலும்
கவிதையான
உன் பார்வைகளே
நான் பெற்ற பாக்கியமடா...!

காதல் பூத்திருக்கும்
உன் பார்வையால்
கவிதை எழுதுகிறது
என் கண்கள்!

24 comments:

மாணவன் said...

very nice... :)

மாணவன் said...

வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பு சூப்பர்...

Unknown said...

me the firstu..

Unknown said...

விழிகளிலே பார்வையின்
அர்த்தம் எவர் கண்டார் ...
ஓவியம் எழுதும்
கவிதையும்
கலக்கலாய் இருக்கின்றது.

Unknown said...

பார்வையின் வேகம்
வ‌தைத்தாலும்
செதுக்குகிறது என்னை!//
வாவ் என்ன ஒரு வார்த்தை பிரவேகம்...
ஒரு ஒரு வரிகளும் பிரகாசிக்கின்றது..
எண்ணங்களின்
கற்பனை ஓவியமாய்
வரிகளில் ....

சாந்தி மாரியப்பன் said...

கவிதை ஜூப்பரா இருக்குதுங்க..

ஹேமா said...

ப்ரியா...ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பக்கம் வாறேன்.அட கவிதை.அதுவும் காதல் பொங்கிப் பொங்கி.கண்கள் எழுதும் காதல் கவிதையோ !

r.v.saravanan said...

காதல் பார்வை கோர்வையாய் இங்கு நல்லாருக்கு பிரியா

puduvaisiva said...

woow really super

Thanks priya .. .

Yaathoramani.blogspot.com said...

காதல் பூத்த கண்கள் தந்த கவிதை
அருமையிலும் அருமையே
நாளும் பதிவைத் தொடர்வேன் இதுபோல் -ஆயிரம்
கவிதைகள் தருகவே

thendralsaravanan said...

கவிதையில் கண் புதைத்து எடுக்க முடியாமல் ....அற்புதமாக எழுதுகிறீர்கள்!

M.R said...

தங்கள் வலைத்தளம் அருமயான வடிவமைப்பு .

ஆடம்பரமில்லாத அழகு .

கவிதை அருமை .

மாய உலகம் said...

ஒரு நிமிடப்பார்வை
உயிர்வரை இனிக்கும்
மறு நிமிடப் பார்வையோ
யுக யுகமாய் நீடிக்கும்!

வரிகள் அல்ல ..ஒரு வித வலிகள்
rajeshnedveera

மாய உலகம் said...

தீராத பார்வைகள்... அழகான கோர்வைகள்

மாய உலகம் said...

பார்வையின் வேகம்
வ‌தைத்தாலும்
செதுக்குகிறது என்னை!


இது உண்மை என உணர்ந்திருக்கிறேன்....

Jayanthy Kumaran said...

ohh...fantastic lyrics..sounds great priya..:)
thank u for stopping by..
Tasty Appetite

Anonymous said...

உன் விழித்தீண்ட‌
யாசிக்கும்
என் கவிதைகளானாலும்
கவிதையான
உன் பார்வைகளே
நான் பெற்ற பாக்கியமடா...!நன்று மிகஅருமை ! தளம் கண்டேன், மிக அழகாக உள்ளது. வாழ்த்துக்கள் !!

மாய உலகம் said...

உங்கள் ப்லாக்கே கவிதையாய் ஓவியங்களுடன் அழகாய் இருக்கிறது... வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

\\பார்வையின் வேகம்
வ‌தைத்தாலும்
செதுக்குகிறது என்னை!///

--அட அட அட .

வாழ்த்துக்கள்
இந்தக்
கவிதைக்குரியவருக்கு

M.R said...

சகோ விற்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

G.AruljothiKarikalan said...

azhagaana kavidhai

The Dreamer said...

This poem makes me feel nostalgic. The way you composed the poem must be appreciated.Keep it up

அப்பாதுரை said...

சொக்கிப் போடும் நுதலும் விழியும் கவிதை படிக்கத் தடையாக இருக்கின்றன.
நன்று :)

Priya said...

Nandri Saambavi Sivaji!

Post a Comment